வடசென்னை மக்​களின் எதார்த்த வாழ்​வியலைப் பேசும் படம், ‘ஆல்​பாஸ்’!!

சென்னை:
வடசென்னை மக்​களின் எதார்த்த வாழ்​வியலைப் பேசும் படம், ‘ஆல்​பாஸ்’. மைதீன் இயக்​கி​யுள்ள இப்​படத்​தில், துஷ்யந்த் நாயக​னாக​வும் ஜனனி நாயகி​யாக​வும் நடித்​துள்​ளனர்.

லியோ, ஜெயப்​பிர​காஷ், சரத் லோகிதஸ்​வா, செந்தி குமாரி, சுப்​பிரமணிய சிவா, வினோ​தினி, ரோஷன் பஷீர் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

ஜேம்ஸ் வசந்​தன் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு தில் ராஜு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் முதல் தோற்ற போஸ்​டரை நடிகர்​கள் சசிகு​மார், விஜய் சேதுபதி வெளி​யிட்​டனர்.

படம் பற்றி இயக்​குநர் மைதீன் கூறும்​போது, “ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த படம் இது. வடசென்னை என்​றாலே வெட்​டு, குத்​து, ரத்​தம், பகை என காட்​டி​யிருக்​கிறார்​கள். அது எது​வுமே இல்லாத வடசென்னை மக்​களின் எதார்த்த வாழ்​வியலை இப்படம் பேசும்.

பகை, வன்​முறை இல்​லாத வடசென்​னை​யில் வாழும் 3 குடும்​பங்​கள், வாழ்க்​கையை அவர்​களது போக்​கில் வாழ்கிறார்கள்.

இயற்கை அவர்​களுக்கு ஒரு டெஸ்ட் வைக்​கிறது, அது என்ன? அதில் பாஸா​னார்​களா? என்​பது திரைக்​கதை” என்றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *