மதுரை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், கீழப்பட்டி கிராமத்தில் அங்காளம்மன் ஸ்ரீ ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
ஸ்ரீ நிவாச நரசிம்ம சர்மா தலைமையான சிவாச்சாரியார்கள் வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் காலை யாக சாலை பூஜையை தொடங்கினார்கள்,
சனிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலையில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் நான்காம் கால யாக சாலை பூஜை தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது.
தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. அதன்பின்னர் பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.