“நாங்​கள் கூட்​டணி பேசுகி​றோம் என்று தெரிந்​தாலே டெல்​லியி​லிருந்து உடனே வந்​து​விடு​கி​றார்​கள்” – செங்கோட்டையன் ஆதங்கம்!!

சென்னை:
அம​முக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கடந்த வாரம் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைந்த நிலை​யில், “தவெக கூட்​ட​ணிக்கு டிடி​வி. தினகரன் வர நினைத்​தார்” என தெரி​வித்​துள்ள தவெக நிர்​வாகக் குழு​வின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் செங்​கோட்​டையன், “நாங்​கள் கூட்​டணி பேசுகி​றோம் என்று தெரிந்​தாலே டெல்​லியி​லிருந்து உடனே வந்​து​விடு​கி​றார்​கள்” என்​றும் தெரி​வித்​தார்.

நேற்று கோவை வந்த கே.ஏ.செங்​கோட்​டையன் கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

பலமுனை தாக்​குதல் என்​பது ஒரு​வர் மாபெரும் வெற்​றியடையப் போகி​றார் என்​ப​தற்​கான ஒரு எடுத்​துக் காட்​டாகும். எல்​லோரும் கூட்​ட​ணிக்கு வரு​வார்​கள் என அவர்​கள் நினைத்​தார்​கள்.

நாமக்​கல்​லில் நடந்த கூட்​டத்​தில், “கொடி பறக்​கிறது பார்த்​தீர்​களா? கூட்​ட​ணிக்கு பெரிய கட்சி வரு​கிறது.

பிள்​ளை​யார் சுழி போட்​டாச்​சு” எனக்​கூறிய​வர்​கள் இவர்​கள் தான். ஆனால், இன்று நிலைமை மாறி​விட்​டது. அதனால் ஒவ்​வொரு​வ​ரும் ஒவ்​வொரு கருத்தை தெரிவிக்​கின்​ற​னர்.

அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள், ஐடி விங் நிர்​வாகி​கள் திமுக-​வைத்​தான் எதிர்க்க வேண்​டும். ஆனால், அதை விட்​டு​விட்​டு, புதி​தாக வந்​துள்ள இயக்​கத்தை எதிர்க்​கின்​ற​னர். இது இது​வரை நடை​முறை​யில் இல்​லாதது ஆகும்.

இதன் மூலம் அதி​முக, திமுக-​வின் பி-டீம் என்​பது நிரூபண​மாகிறது. நான், மறைந்த முன்​னாள் முதல்​வர்​கள் எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகி​யோ​ருடன் பயணம் செய்​தவன். என்னை அரசி​யலுக்கு அடை​யாளம் காட்​டியதே எம்​ஜிஆர் தான்.

என் மீது யாராவது ஊழல் குற்​றச்​சாட்டை சொன்​னால் அவர்​கள் நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை தெளி​வாக படித்​துப் பார்த்​து​விட்​டுச் சொல்​லட்​டும்.

சிலசம​யம், அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் வழக்​கு​களைத் தொடர்​வார்​கள். அப்​படித்​தான் என் மீதும் வழக்​குத் தொடர்ந்​தனர்.

ஆனால், நான் குற்​றம் செய்​ய​வில்லை என நீதி​மன்​றம் தெரி​வித்​தது. நான் தூய்​மை​யாளன் என நீதி​மன்​றமே தெரி​வித்​துள்​ளது.

எனவே, என்​னைப் பற்றி பேச அவர்​களுக்கு உரிமை இல்​லை. இது​போல் யாராவது இனி குற்​றச்​சாட்டு கூறி​னால் அவர்​கள் மீது நீதி​மன்​றம் மூல​மாக நடவடிக்கை எடுக்​கப்​படும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் எங்​களது கூட்​ட​ணிக்கு வரா​தது ஏமாற்​ற​மாக இல்​லை.

ஒவ்​வொரு நாளும் ஒவ்​வொரு நிலை எடுக்​கின்​ற​னர். அது​போல் அவரும் ஒரு நிலை எடுத்​தார். டிடி​வி.​தினகரன் எங்​களது கூட்​ட​ணிக்கு வர நினைத்​தார்.

ஆனால், சூழ்​நிலை காரண​மாக அவர் எங்​களு​டன் வர முடிய​வில்​லை. அவர் எங்கு சென்​றாலும் வாழ்க.

நாங்​கள் கூட்​டணி பேசுகி​றோம் என்று தெரிந்​தாலே டெல்​லி​யில் இருந்து உடனே வந்து விடு​கி​றார்​கள்.

அதனால் நான் எது​வும் சொல்​லாமல் இருப்​பது தான் நல்​லது. திமுக-​வும், அதி​முக-​வும் அண்​ணாவை மறந்து விட்​டனர்.

இவ்​வாறு அவர் கூறி​னார். தொடர்ந்​து, தவெக கூட்​ட​ணிக்கு ராம​தாஸ் தலை​மையி​லான பாமக அணி வரு​வ​தாக தகவல் வரு​கிறதே என செய்​தி​யாளர்கள் கேட்​டதற்கு “செய்​தி​களில் நானும் படித்​தேன். நல்​லது நடக்​கட்​டும்” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *