சாப்பிடுதல் என்பது வெறும் வழக்கமான சம்பிரதாயம் அல்ல. இன்று உடம்புக்கு இந்த அளவு உணவு தேவை, அதனால் நீங்கள் அவ்வளவு சாப்பிடுகிறீர்கள். நாளை அவ்வளவு தேவைப்படாமல் இருக்கலாம். ஒருவர் சாப்பிட வேண்டும்தான், ஆனால் அந்த உணவு நமக்கு அளிக்கும் ஊட்டத்தில் மகிழ்ந்து நம் உயிருக்கும் உணவுக்குமான தொடர்பை நன்றியுடன் உணர்ந்து சாப்பிட வேண்டும்.
இது சாப்பிடுவதில் இருக்கும் இன்பத்தை குறைப்பதற்காக அல்ல. உணவை உண்பதில் உள்ள உண்மையான ஆனந்தமே, இன்னொரு உயிர் உங்கள் உயிருடன் ஒன்றி கலந்து நீங்களாகவே ஆகிறது என்பதை உணர்ந்து உண்பதுதான் என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.
யோக கலாச்சாரத்தில் எப்பொழுதும் உங்கள் கால்களை மடக்கி அமரவும், ஒரு சக்தி வடிவம் இருக்கும் திசைநோக்கி கால்களை நீட்டாதிருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன.
எந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், எந்த உணவை முதலில் பரிமாற வேண்டும், இலையை எவ்வாறு மூட வேண்டும் போன்ற பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும். அவ்வாறு உணவு சாஸ்திர முறைப்படி சாப்பிடும்போது குடும்பத்தில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை தானாகவே ஏற்படும்.
சாப்பட்டினை நமக்கு யாராவது பரிமாற வேண்டும். இலையில் முதலில் காய்கறி, அப்பளம் போன்றவற்றை வைத்துவிட்டே சாதத்தை பரிமாற வேண்டும். எடுத்த உடனேயே சாதத்தை பரிமாறக்கூடாது. அதைப்போல வத்தல், கீரையை முதலில் பரிமாறக் கூடாது.
உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டு உணவு உண்ணும் போது நமக்கு நன்மை பயக்கும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து சாபிட்டால், ஆயுள் வளரும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், பொருள் சேரும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், புகழ் வளரும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. நோய்தான் வரும்.
பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்பொழுது நோய் சேரும். சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.
வேறு வேலைகள் எதுவும் செய்துக்கொண்டே உணவை உண்ணக்கூடாது. குறிப்பாக செல்போன், டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடக்கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாப்பிடும்பொழுது வீட்டின் கதவு மூடியிருக்க வேண்டும். வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமனத்தின்போதும் சாப்பிடக்கூடாது.
இதுபோன்ற உணவு சாஸ்திரத்தை பின்பற்றி நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு பெற்று வாழலாம்.