தமிழ்​நாடு வக்பு வாரி​யத்​துக்கு இணைச் செய​லா​ளர் அந்​தஸ்​தில் உள்ள ஐஏஎஸ் அதி​காரியை முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில்,தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!

சென்னை:
தமிழ்​நாடு வக்பு வாரி​யத்​துக்கு இணைச் செய​லா​ளர் அந்​தஸ்​தில் உள்ள ஐஏஎஸ் அதி​காரியை முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தமிழக அரசும், வக்பு வாரிய​மும் 4 வார காலத்​துக்​குள் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக வக்பு வாரிய பாது​காப்​புக்​குழு அறக்​கட்​டளை தலை​வ​ரான மதுரை கட்​ரா​பாளை​யத்​தைச் சேர்ந்த எம்​.அஜ்மல்​கான் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், தமிழகம் முழு​வதும் கோடிக்​கணக்​கான ரூபாய் மதிப்​புள்ள வக்பு வாரிய சொத்​துக்​களை கண்​காணித்து பாது​காக்​கும் பொறுப்​பும், கடமை​யும் முதன்மை செயல் அதி​காரிக்கே உள்​ளது.

ஆனால் தமிழ்​நாடு வக்பு வாரி​யத்​தில் பணிபுரிந்த முன்​னாள் முதன்மை செயல் அதி​காரி​கள், கண்​காணிப்​பாளர்​கள், இளநிலை உதவி​யாளர் உள்​ளிட்ட பலர் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்​புள்ள வக்பு வாரிய சொத்​துக்​களுக்கு சட்​ட​விரோத​மாக தடை​யில்லா சான்று வழங்கி அவற்றை விற்​பனை செய்து மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளது தொடர்​பாக​வும், தவறு செய்த வக்பு அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி​யும் ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​துள்​ளேன்.

அந்த வழக்​கில் தவறு செய்த அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதி​மன்​ற​மும் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் வக்பு வாரிய திருத்​தச் சட்​டப்​படி மாநில வக்பு வாரி​யத்​துக்கு தமிழக அரசின் இணைச் செய​லா​ளர் அந்​தஸ்​துக்கு குறை​யாத ஐஏஎஸ் அதி​காரியை நிரந்தர முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்க வேண்​டும்.

ஆனால் தமிழக அரசு துணைச் செய​லா​ளர் கிரேடு -2 அந்​தஸ்​தில் உள்ள சென்னை மாநக​ராட்​சி​யில் அடை​யாறு மண்டல துணை ஆணை​ய​ராக பணி​யாற்​றிய ஐஏஎஸ் அதி​காரி​யான அப்​தாப் ரசூல் என்ற அதி​காரியை வக்பு வாரி​யத்​தின் முதன்மை செயல் அதி​காரி​யாக கடந்​தாண்டு மே மாதம் நியமித்​துள்​ளது.

இது வக்பு வாரிய சட்​டத்​துக்கு எதி​ரானது என்​ப​தால் அப்​தாப் ரசூல் வக்பு வாரி​யத்​தின் முதன்மை செயல் அதி​காரி​யாக பதவி வகிக்க தடை விதிக்க வேண்​டும்.

அத்​துடன் வக்பு வாரி​யத்​துக்கு இணைச் செய​லா​ளர் அந்​தஸ்​தி்ல் உள்ள ஐஏஎஸ் அதி​காரியை முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்க தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் எம். ராமமூர்த்தி ஆஜராகி வாதி்ட்​டார்.

அதையடுத்து நீதிபதி எந்த அடிப்​படை​யில் ஐஏஎஸ் அதி​காரி​யான அப்​தாப் ரசூல் வக்பு வாரி​யத்​தின் முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார் என்​ப​தற்​கான ஆவணங்​களை 4 வார காலத்​துக்​குள் தாக்​கல் செய்ய தமிழக அரசுக்​கும், வக்பு வாரி​யத்​துக்​கும் உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *