சென்னை:
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக எம்எல்ஏ சவுமியா பேசினார்.
அப்போது அவர்,”சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும்.
கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்” என்றார்.
அப்போது, “மதுக்கடைகள் குறித்து சட்டமன்றத்தில் சவுமியா அன்புமணி பேசியபோது, உடனடியாக பேப்பர் எடுத்து முதலமைச்சர் விஜய் குறித்துக்கொண்டார்.