வசிஷ்டரின் சோமவார விரதம்: இந்த விரதம் திங்கட்கிழமை தோறும் அனுஷ்டிக்கப்பட்டாலும், கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
பிரதோஷ விரதம்: இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையிலிருந்து வரும் 13-ம் நாள் திரயோதசி திதியில் கடைபிடிக்கப்படும் மிக விசேஷமான விரதமாகும்.
திருவாதிரை விரதம்: மார்கழி மாதத்தில் பவுர்ணமியன்று, திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
கல்யாண விரதம்: பங்குனி மாத உத்திரத்தன்று அம்பிகை உமையை சிவபெருமான் மணந்தார். அன்றைய தினத்தில் அதையொட்டி இந்த கல்யாண விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
உமா மகேஸ்வர விரதம்: சிவபெருமானின் அங்கத்தில் இட பாகத்தைப் பெற கடுமையான விரதம் மேற்கொண்டார் உமையம்மை. அதையொட்டி கார்த்திகை பவுர்ணமியன்று கடைபிடிக்கப்படும் விரதம் இது.
மகா சிவராத்திரி விரதம்: மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இரவில் கண் விழித்து சிவபெருமான் கோவிலில் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டுகளித்து அனைத்து வயதினராலும் பக்தியோடு கடைபிடிக்கப்படும் விரதம் இது.
ரிஷப விரதம்: வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் இது.
சூல விரதம்: இந்த விரதம் தை அமாவாசையன்று கடைபிடிக்கப்படுகிறது.
பரசுராமர் இந்த விரதத்தை அனுசரித்து பலம்மிக்க கார்த்த வீர்யார்ஜுனனை வதைத்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமானை நினைத்து இவ்விரத வழிபாடுகளை மேற்கொண்டால் இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியையும் பெறலாம்.