காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து பிரதான அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவியில் ஆகிய அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்த நிலையில் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள வர்த்தகர்களும் விடுதி உரிமையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.