அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !!

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுபடுத்தி காமராஜர் பிறந்தநாளான இன்று காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். திருவள்ளூர், கீழச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 15.07.24 முதல் தமிழகத்தில் உள்ள ஊரகப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *