பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து சிந்து வெளியேற்றம்!!

இந்தியாவின் பி.வி.சிந்து பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து சிந்து வெளியேறியுள்ளார்.பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவிடம் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (16வது சுற்று), பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் மோதினார். .விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 – 19, 21 – 14, என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

.2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வி அடைந்து வெளியேறினார். ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் மட்டுமே எஞ்சியுள்ளார்.

பாட்மிண்டனில் இந்தியாவுக்கான பதக்கத்தை (ஆண்கள் பிரிவில்) அவர் உறுதி செய்வார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *