நீச்சல் உடையில் மிருணாள் தாகூர்…

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் மிருனாள் தாகூர். மேலும் பல இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மிருனாள் தாகூர் குளியல் தொட்டியில் நீச்சல் உடையில் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மிருனாள் தாகூர் இப்படி ஆபாசமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கலாமா என்றும் பலர் கேள்வி எழுப்பி கண்டித்துள்ளனர்.

விசாரணையில் அது போலி டீப் பேக் புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் மிருனாள் தாகூர் முகத்தை இன்னொரு பெண்ணின் உடலோடு ஒட்டி இந்த புகைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.

இது பரபரப்பாகி உள்ளது. ஏற்கனவே பல நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *