நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு!!

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர். இதனையடுத்து திருமண உறவில் இருந்து பிரிந்து வாழந்த நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யா ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

இந்த நிலையில், இன்று நடிகர் தனுஷ் விசாரணைக்கு ஆஜரானார். நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகினர். திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *