தூய்மை பணியாளர் சகோதர,சகோதரிகளை குப்பை வண்டியில் அழைத்து சென்று மருத்துவ முகாம் நடத்திய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கரூரில் தூய்மை பணியாளர் சகோதர,சகோதரிகளை குப்பை வண்டியில் அழைத்து சென்று மருத்துவ முகாம் நடத்திய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் தூய்மை பணியாளர்களின் அருகில் இருந்து சாப்பிடுவது போல் போட்டோ விளம்பரம் செய்துவிட்டு கரூரில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு தூய்மை பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றி செல்வதுதான் உங்கள் திராவிட மாடலா? என குறிப்பிட்டுள்ளார்.