கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் !!

சென்னை:
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.

இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை. முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது என கூறினார்.

இந்த நிலையில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு 54 கடிதங்கள் எழுதியுள்ளேன். 10 வருடம் ஆட்சியில் இருந்தீர்களே என்ன செய்தீர்கள்? அண்மையில் டெல்லி சென்றீர்களே, கச்சத்தீவை மீட்க வலியுறுத்தினீர்களா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *