காலிறுதிக்கு முன்னேறிய கோகோ காப், ஆண்ட்ரீவா…..

மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.


பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார்.


இதில் கோகோ காப் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் யுலியாவை வீழ்த்தி கலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *