முதல் இடத்துக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி!!

ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

2வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை பஞ்சாப்பும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.


ராஜஸ்தான் அணி 11 போட்டியில் 3 வெற்றி, 8 தோல்வி என எட்டாவது இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *