”மீண்டும் இணையும் தெகிடி கூட்டணி”!!

சென்னை:
அறிமுக இயக்குனராக களமிறங்கி, தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ரமேஷ் 11 வருடம் கழித்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார்!


அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தெகிடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அசோக் செல்வனுக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தையும் உயர்த்தி கொடுத்தது.

துப்பறியும் வித்தியாசமான கதைக்களத்தில் கிரைம் திரில்லர் திரைப்படமாக கவனம் பெற்றது இத் திரைப்படம். அதோடு அற்புதமான திரைக்கதையும், பின்னணி இசையும் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் 11 வருடம் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சில காரணங்களால் தொடர்ந்து படங்களை இயக்க முடியாமல் இருந்த ரமேஷ் எங்கே சென்றார் என்ற கேள்வியும் எழுந்து வந்த நிலையில், அவர் அசோக் செல்வவுடன் 11 வருடம் கழித்து மீண்டும் இணைய உள்ளார்.

இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *