ரூ.5.25 கோடி​யில் செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டும் பணிக்​கு அடிக்​கல் நாட்​டி​னார் – மேயர் ஆர்​.பிரியா …..

சென்னை:
சென்னை மாநக​ராட்சி சார்​பில், தண்​டை​யார்​பேட்டை தொற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில், ரூ.5.25 கோடி​யில் செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டும் பணிக்​கு, மேயர் ஆர்​.பிரியா நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில், தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், 43-வது வார்​டு, தண்​டை​யார்​பேட்டை தொற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில் ரூ.5.25 கோடி​யில், மருத்​துவ இணை​யியல் படிப்பு பயிலும் உதவி செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டு​மானப் பணி​கள் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மேயர் ஆர்​.பிரியா பங்​கேற்று திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்​தக் கட்​டிடம், தரைத்​தளம் மற்​றும் முதல் தளத்​துடன் 1,560 சதுர மீட்​டர் பரப்​பள​வில் கட்​டப்​பட​வுள்​ளது. இதில், தரைத் தளத்​தில் முதல்​வர் அறை, காப்​பாளர் அலு​வல​கம், காப்​பாளர் அறை, பெற்​றோர் காத்​திருப்பு அறை, சமையலறை, உணவுக் கூடம், கழிப்​பறை உள்​ளிட்ட 14 அறை​களும் கட்​டப்​பட​வுள்​ளது.

இந்​நிகழ்ச்​சி​யில், பெரம்​பூர் தொகுதி எம்​எல்ஏ ஆர்​.டி.சேகர், ஆர்​.கே.நகர் தொகுதி எம்​எல்ஏ ஜே.ஜே.எபினேசர், வடக்கு வட்​டார துணை ஆணை​யர் கட்டா ரவி தேஜா, நிலைக் குழுத் தலை​வர் (பொது சுகா​தா​ரம்) கோ.​சாந்​தகு​மாரி, மண்​டலக் குழுத் தலை​வர் நேதாஜி யு. கணேசன், கவுன்​சிலர்​கள் மோ.ரேணு​கா, ந.ப​வித்ரா மற்​றும் அலு​வலர்​கள்​ உள்ளிட்ட பலர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *