வருகிற 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்கிறார்!!

சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியார் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் ஆகியோர் தலா 2 வேட்பு மனுக்களும், அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி.கள் ஜூலை 25ம் தேதி பதவியேற்கவுள்ளனர்.

அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை(ராஜ்ய சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிம் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கமல்ஹாசன், வருகிற 25ம் தேதி அன்று பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *