திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா!!

திருமலை:
திருப்பதி கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (வெள்ளிக்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மகான்யாச ஏகாதச ருத்ராபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகித்தேர்) காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.

நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம் நடக்கிறது.

அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத், எஸ்.வி.சங்கீத், நிருத்ய கலாசாலா ஆகியவை ஏற்பாட்டில் பக்தி இசை மற்றும் கலா சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மகாசிவராத்திரிக்கு மறுநாள் (சனிக்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இந்தத் திருக்கல்யாண மகோற்சவம் அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆர்ஜித சேவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *