வேறு கட்​சி​யில் சேரப்​போவ​தாக தகவல் பரவிய நிலை​யில், “உடல் மண்​ணுக்​கு, உயிர் என் உயிர் அதி​முக​வுக்​கு” – முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார்!!

சென்னை:
வேறு கட்​சி​யில் சேரப்​போவ​தாக தகவல் பரவிய நிலை​யில், “உடல் மண்​ணுக்​கு, உயிர் என் உயிர் அதி​முக​வுக்​கு” என்று முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக சென்​னை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நான் ஒரு கட்​சி​யில் சேரப்​போவ​தாக யூடியூப் சேனல்​களில் செய்​தி​கள் வரு​கின்​றன.

நான் மானஸ்​தன் என்​பது முதல்​வர் ஸ்டா​லினுக்கே தெரி​யும். யார் வீட்டு முன்​னாடி​யும் பதவிக்​காக நான் நின்​ற​தில்​லை.

திரா​விட பாரம்​பரி​யத்​தில் பெரி​யார், அண்ணா வழி​யில், அவருக்கு பின்​னர் எம்​ஜிஆர் வழி​யில் வந்​தவன் நான்.

என் உடல் மண்ணுக்​கு, உயிர் அதி​முக​வுக்​கு. இது​தான் எனது கொள்​கை, நிலைப்​பாடு. ‘ஒன்​றிணைவோம் வா’ என்று சொல்லி பல மாவட்டங்களில் திமுக கூட்​டம் நடக்​கும்​போது, உட்​கட்சி பூசல்​கள் வெடிக்​கின்​றன.

ஒவ்வோர் ஆண்​டும் ஒரு லட்​சம் வேலை வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வோம். அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை செயல்​படுத்​து​வோம் என்று வாக்​குறுதி அளித்​து​விட்டு திமுக ஆட்​சிக்கு வந்​தது. 4 ஆண்​டு​கள் ஆகி​விட்ட நிலை​யில், வேலை​வாய்ப்பு வழங்​கு​வதற்கு பதிலாக வேலை​வாய்ப்பை பறித்து வரு​கின்​றனர்.

பணிநிரந்​தரம் கோரி போராட்​டத்​தில் ஈடு​படும் தூய்மைப் பணி​யாளர்​களை அழைத்​துப் பேசி அவர்​களுக்கு தீர்வு காண அரசு விரும்​ப​வில்​லை.

17 ஆண்​டு​கள் மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்த கால​கட்​டத்​தில் எவ்​வளவோ திட்​டங்​களை தமிழகத்​துக்கு கொண்டு வந்​திருக்​கலாம்.

ஆனால் முழுக்க முழுக்க தனது குடும்ப நலனுக்​காக வளம்​மிக்க துறை​களை திமுக​வினர் பெற்​றனர்.

இலங்​கை​யில் இனப்​படு​கொலை​யின் போது ஒன்​றரை லட்​சம் தமிழர்​கள் படு​கொலை செய்​யப்​பட்​ட​போது அதை தடுக்கவில்லை.

எல்லா அட்​டூழி​யங்​களும் செய்​து​விட்டு தேர்​தல் வரும் போது புதிய அவதா​ரம் எடுத்து வரு​வார்​கள். அது தமிழக மக்​களுக்கு நன்​றாகவே தெரி​யும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *