முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் ஆய்வு மேற்​கொண்டு அங்கே நடை​பெற்று வரும் பணி​களை விரைந்து முடிக்க அறி​வுறுத்​தல்!!

சென்னை: ​
முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் ஆய்வு மேற்​கொண்டு அங்கே நடை​பெற்று வரும் பணி​களை விரைந்து முடிக்க அறி​வுறுத்​தி​னார்.

மெரினா கடற்​கரை​யில் அமைந்​துள்ள முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமிநாதன் நேற்று மலர்​தூவி மரி​யாதை செய்​தார். இதைத் தொடர்ந்து நினை​விடங்​களில் நடை​பெற்று வரும் பணி​களை ஆய்வு செய்​தார்.

அண்ணா நினை​விடத்​தில், ஸ்தூபி, சிலை புதுப்​பிக்​கும் பணி, புல்​வெளி​களை பராமரித்​தல், உடைந்​துள்ள பளிங்​குக் கற்​களை சீரமைத்​தல், தரை​யில் மழைநீர் தேங்​காத வண்​ணம் சீர் செய்​யும் பணி, அண்ணா வளைவு முகப்பை தூய்மை செய்​தல் உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

கருணாநிதி நினை​விடத்​தில் கலைஞர் உலக அருங்​காட்​சி​யகத்​தில் கலைஞர் நிழலோ​வி​யங்​கள், உரிமைப் போராளி கலைஞர், அரசி​யல் கலை அறிஞர் கலைஞர், கலைஞரின் சிந்​தனைச் சிதறல்​கள், சரித்​திர நாயக​னின் சாதனைப் பயணம், கலைஞர் புத்தக விற்​பனை நிலை​யம் ஆகிய இடங்​களில் நடை​பெற்று வரும் பணி​களை​யும் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​து, பணி​களை விரைந்து முடிக்​கு​மாறு அறி​வுறுத்​தி​னார்.

கருணாநிதி நினை​விடத்தை 65 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பொது​மக்​கள் பார்​வை​யிட்​டுள்​ள​தாக அமைச்​சர் தெரி​வித்​தார். இந்நிகழ்வின்​போது, தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறை செய​லா​ளர் வே.​ராஜா​ராமன், செய்தி மக்​கள் தொடர்​புத் துறை கூடு​தல் இயக்குநர் ரா.​பாஸ்​கரன், செயற்​பொறி​யாளர் எஸ்​.​விஜய்​ஆனந்​தன் மற்​றும் அரசு அலுவலர்​கள் உடனிருந்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *