பீகார்;
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதன்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ஆரிப் கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலையில் 1.86 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலையாக, ரூ.1,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 8.15 கிலோ மீட்டர் நீளமுள்ள அவுண்டா-சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
கயா-டெல்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், வைஷாலி-கோடெர்மா இடையேயான ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
பீகாரில் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.