சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது.
தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் ‘என்ன சுகம்’ முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதி ஸ்வேதா மோகனுடன் பாடியுள்ளார்.
‘இட்லி கடை’ படத்தை தொடர்ந்து தேரே இஷ்க் மெயின் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரது இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ‘இட்லி கடை’ படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.