தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவலர் வீட்டு வசதி கழக நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் குமார் யாதவ் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!!

சென்னை:
​நாளை​யுடன் பணிஓய்வு பெறவுள்ள டிஜிபிக்கள் சங்​கர் ஜிவால் மற்​றும் சைலேஷ் குமாருக்​கான பிரிவு உபச்​சார விழா நேற்று நடை​பெற்​றது.தமிழக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் நாளை​யுடன் (31-ம் தேதி) பணிஓய்வு பெறுகிறார். இதே​போல், மற்​றொரு டிஜிபி​யான, தமிழ்​நாடு போலீஸ் ஹவுசிங் கார்​பரேசன் லிமிடெட் தலை​வ​ராக இருந்த சைலேஷ் குமார் யாத​வும் நாளை​யுடன் பணிஓய்வு பெறுகிறார்.

இதையொட்டி இரு​வருக்​கும் பணிநிறைவு பாராட்டு விழா மற்​றும் பிரிவு உபச்​சார விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. போலீஸ் உயர் அதி​காரி​கள் மற்​றும் ஓய்​வு​பெற்ற போலீஸ் அதி​காரி​கள் உட்பட ஏராள​மானோர் இதில் பங்​கேற்று பாராட்டி பேசினர். இதையடுத்​து, இரு​வருக்​கும் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதை நடை​பெற்​றது. அதை ஏற்​றுக் கொண்​டபின் சங்​கர் ஜிவால் பேசும்​போது நன்றி தெரி​வித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் டிஜிபிக்​கள், பிரமோத்​கு​மார், சீமா அகர்​வால், சந்​தீப்​ராய் ரத்​தோர், அபய்​கு​மார் சிங், வன்​னியபெரு​மாள், வெங்​கட​ராமன், சட்​டம் ஒழுங்கு கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சென்னை காவல் ஆணை​யர் அருண் உள்பட பலர் கலந்து கொண்​டனர். சங்​கர் ஜிவால் உத்​தர​காண்ட் மாநிலம், அல்​மோரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர்.

பொறி​யியல் படிப்பை முடித்​திருந்த இவர் 1990 பேட்ச் ஐபிஎஸ் அதி​காரி ஆவார். மன்​னார்​குடி உதவி எஸ்​பி, சேலம், மதுரை மாவட்ட எஸ்​பி, திருச்சி காவல் ஆணை​யர், மத்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்​குநர், உளவுப்​பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்​படை கூடு​தல் டிஜிபி என போலீஸ் துறை​யில் பல்​வேறு பதவி​களை வகித்​தவர். அயல் பணி​யாக மத்​திய அரசிலும் 8 ஆண்​டு​கள் பணி​யாற்றி உள்​ளார்.

சென்​னை​யின் 108-வது காவல் ஆணை​ய​ராக 2 ஆண்​டு​கள் பணி​யாற்றி உள்​ளார். மெச்​சத்​தகுந்த பணிக்​காக 2 முறை குடியரசுத் தலை​வர் பதக்​கம் பெற்​றவர். இந்​நிலை​யில் 2 ஆண்​டு​கள் டிஜிபி​யாக பதவி வகித்த சங்​கர் ஜிவால் நாளை​யுடன் பணிஓய்வு பெறுகிறார்.

தீ ஆணைய தலை​வர்: தீ மற்​றும் உயிர் மீட்பு பணி​களில் புதிய தொழில் நுட்ப நுணுக்​கங்​களை செயல்​படுத்​தும் நோக்​குடன் தீ ஆணை​யம் ஒன்றை தமிழக அரசு அமைத்​துள்​ளது. அதற்கு தலை​வ​ராக சங்​கர் ஜிவாலை நியமித்து அரசு உத்​தரவு பிறப்பித்துள்ளது.

டிஜிபி சங்​கர் ஜிவால் பதவி காலம் வரும் 31-ம் தேதி​யுடன் நிறைவடை​யும் நிலை​யில் நிர்​வாக பிரிவு டிஜிபி​யாக உள்ள வெங்​கட​ராமன், நாளை முதல் சட்​டம்-ஒழுங்கு பொறுப்​பை​யும் கூடு​தலாக கவனிக்க உள்​ள​தாக​வும் அதற்​கான அறி​விப்​பு வெளி​யாக உள்​ள​தாக​வும்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *