அதி​முக ஒன்​றிணைய வேண்​டும் என்ற எனது கருத்​துக்கு தொண்​டர்​கள், பொது​மக்​களிடையே வரவேற்பு கிடைத்​துள்​ளது – இதை புரிய வேண்​டிய​வர்​கள் புரிந்து கொள்ள வேண்​டும்!! முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் …

ஈரோடு:
அதி​முக ஒன்​றிணைய வேண்​டும் என்ற எனது கருத்​துக்கு தொண்​டர்​கள், பொது​மக்​களிடையே வரவேற்பு கிடைத்​துள்​ளது.

இதை புரிய வேண்​டிய​வர்​கள் புரிந்து கொள்ள வேண்​டும் என முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி அதி​முக எம்​எல்ஏவு​மான செங்​கோட்​டையன், கடந்த 5-ம் தேதி, செய்​தி​யாளர்​களிடம் பேசும்​போது,; ‘அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும்.

இதைச் செய்​யத் தவறி​னால், இதே மனநிலை​யில் இருப்​பவர்​களை சேர்த்து ஒருங்​கிணைக்​கும் பணியை நாங்​களே மேற்​கொள்​வோம்’ என தெரி​வித்​தார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு 10 நாள் கெடு விதித்து செங்​கோட்​டையன் அறி​விப்பு வெளி​யிட்​டது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்த அறி​விப்பு வெளி​யான அடுத்த நாளே, செங்​கோட்​டையன் வகித்து வந்த அமைப்​புச் செய​லா​ளர் மற்​றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் கட்சி பொறுப்​பு​கள் பறிக்​கப்​பட்​டன.

இதன் தொடர்ச்​சி​யாக கடந்த 7-ம் தேதி டெல்லி சென்ற செங்​கோட்​டையன், மத்​திய அமைச்​சர்​கள் அமித்ஷா மற்​றும் நிர்​மலா சீதா​ராமன் ஆகியோரை சந்​தித்​துப் பேசி​னார்.

அதி​முகவை ஒருங்​கிணைப்​பது தொடர்​பாக அவர்​களிடம் பேசி​ய​தாக செங்​கோட்​டையன் தெரி​வித்​தார். இந்​நிலை​யில், செங்​கோட்​டையன் விதித்​திருந்த 10 நாள் கெடு நேற்று முடிவடைந்த நிலை​யில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அவரது அறி​விப்பு வெளி​யாகும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது.

செய்தியாளர் சந்திப்பு: ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதி​முக அலு​வல​கத்​துக்கு நேற்று காலை வந்த செங்​கோட்​டையன், முன்​னாள் முதல்​வர் அண்ணா படத்​துக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

தொடர்ந்து அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: எம்​ஜிஆர், ஜெயலலி​தா​வின் கனவை நன​வாக்​கும் வகை​யில், 100 ஆண்டு காலம் அதி​முக ஆட்​சி​யில் அமர வேண்​டும் என்ற நோக்​கில் தான் கடந்த 5-ம் தேதி மனம் திறந்து பேசினேன். என்​னைப் பொறுத்​தவரை அதி​முக ஒன்​றுபட வேண்​டும் என்​பதே எனது நோக்​கம்.

எனது கருத்​துக்கு கட்​சித் தொண்​டர்​கள், பொது​மக்​கள் இடையே வரவேற்பு கிடைத்​துள்​ளது. அவர்​களின் கருத்​தைத்​தான் நான் பிர​திபலித்​துள்​ளேன்.

இதை புரிய வேண்​டிய​வர்​கள் புரிந்து கொள்ள வேண்​டும். அடுத்​தாண்டு நடக்​கும் சட்​டப்​பேர​வைத் தேர்த​லில், அதி​முக வெற்றி பெற, அனை​வரும் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும்.

‘மாற்​றான் தோட்​டத்து மல்​லிகைக்​கும் மணம் உண்​டு, மறப்​போம் மன்​னிப்​போம்’ என்ற அண்​ணா​வின் பொன்​மொழிகளை அவரது பிறந்​த​நாளில் நினை​வூட்​டு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

மத்​திய அமைச்​சர் அமித்​ஷா உட​னான சந்​திப்பு உள்​ளிட்ட பல்​வேறு கேள்வி​களுக்கு செங்​கோட்​டையன் பதில் அளிக்​கவில்​லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *