திருப்பதி கோவிலில் தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம்!!

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் திருப்பதியில் பிரமோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளது. நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் 5 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 408 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கமாக இந்த அளவுக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
நேற்று விரைவாக தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பதி கோவிலில் நேற்று 67,408 பேர் சாமி தரிசனம் செய்தனர் 16,597 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.

ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் தொடங்க உள்ளதால் அங்குரார்ப்பணம் நாளை நடக்கிறது. 9 மண்பானைகளில் நவ தானியங்கள் தூவப்பட்டு அந்த விதைகளில் இருந்து வெளிவரும் முளைகள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *