பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !!

பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடந்தது.

விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

  • நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு இங்கு வந்துள்ளேன்.
  • பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம்.
  • அரசு நிகழ்ச்சியா அல்லது மண்டல மாநாடா என்று எண்ணக்கூடிய அளவுக்கு கூட்டம் இருக்கிறது.
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம் என ஏராளமாக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
  • அனைத்து திட்டங்களுக்கும் முத்தாய்ப்பாக நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடி மக்களிடமும் பேசும் முதல்வர் நான்தான்.
  • திமுக ஆட்சியின் மீது பொறாமைப்பட்டு வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி நடத்தி வருகிறார்கள்.
  • பொய், அவதூறுகளை பரப்புவோருக்கு பாடம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.
  • கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
  • கோவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முத்தாய்ப்பாக மதுரை போன்று நூலகம் அமைக்கப்படும்.
  • திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • தென்னை நோய் பாதிப்புகளை களைய ரூ.14 கோடி நிதி வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
  • அகில இந்திய அளவில் தென்னை விற்பனைக்கு தொடர்பு ஏற்படுத்தப்படும்.
  • கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடி விற்பனை செய்யப்படும்.
  • உக்கடத்தில்ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்.
  • குளிரூட்டப்பட்ட மஞ்சள் கிடங்குகள் அமைக்கப்படும்.
  • ஈரோடு மாவட்டத்தில் 8 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.
  • ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • சமுதாய நலக்கூடங்கள் ரூ.11 கோடியில் சீரமைக்கப்படும்.
  • உதகை தாவரவியல் பூங்கா உலக தரத்தில் உயர்த்தப்படும்.
  • புதிதாக 2 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.
  • நான் ஒரு கோப்பில் கையெழுத்திட்டால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.
  • 10 ஆண்டு ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா?
  • கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?
  • பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்.
  • கொடநாடு கொலை சம்பவம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது.
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா விவசாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது?
  • அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்.
  • ஒன்றிய அரசின் உதவி இன்றியே பல சாதனைகளை செய்கிறோம். உதவி இருந்தால் 10 மடங்கு சாதனைகளை செய்வோம்.
  • மோடி உத்தரவாதம் என்று கூறுகிறார். வேலைவாய்ப்பு குறித்த அளித்த வாக்குறுதி என்ன ஆனது?
  • அடுத்த வாரம் பிரதமர் வரும்போது, அவரிடம் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்.
  • எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?
  • மத்திய அரசின் திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் சொல்கிறார். பிரதமரின் கட்டுக்கதைகள் எடுபடாது என்று கூறினார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *