மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது – மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங்!!

புதுடெல்லி:
மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்க முடி​யும்.

இதுகுறித்து மத்​திய பணி​யாளர் நலத் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங், எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2021-ம் ஆண்​டில் அக்​டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்​தியா திட்​டத்தை மேற்​கொள்​வது என மத்​திய அரசு முடி​வெடுத்​தது.

நிர்​வாக சீர்​திருத்​தங்​கள் மற்​றும் பொது குறைதீர்ப்​புத் துறை, 84 மத்​திய அமைச்​சகங்​கள் மற்​றும் துறை​களின் ஒத்​துழைப்பு மூலம் இந்த இயக்​கத்தை ஒருங்​கிணைக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வரு​கிறது.

இந்த தூய்மை பிரச்​சா​ரத்​தின் மூலம் மத்​திய அரசு அலு​வல​கங்​களில் தேங்​கி​யுள்ள தேவையற்ற பயன்​படுத்​தப்​ப​டாத பழைய பொருட்​களை விற்​பனை செய்ய முடி​வெடுக்​கப்​பட்​டது.

தொடர்ச்​சி​யாக கடந்த 5 ஆண்​டு​களாக முன்​னெடுக்​கப்​பட்ட இந்த திட்​டத்​தின் மூலம் மத்​திய அரசுக்கு ரூ.4,100 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இது, ஒரு பெரிய விண்​வெளித் திட்​டம் அல்​லது பல சந்​தி​ராயன் திட்​டங்​களின் செலவை ஈடு செய்ய போது​மானது ஆகும்.

பழைய கோப்​பு​கள் மற்​றும் பிற கழி​வு​களால் ஆக்​கிரமிக்​கப்​பட்​டிருந்த இடத்தை அவற்றை விற்​பனை செய்து சுத்​தப்​படுத்​தி​யதன் மூலம் 923 லட்​சம் சதுர அடி இடம் இப்​போது முழு​வது​மாக பயன்​பாட்​டுக்கு வந்​துள்​ளது. இதனை பெரிய வர்த்தக வளாகம் அல்​லது மிகப்​பெரிய உள்​கட்​டமைப்பை உரு​வாக்​கு​வதற்கு பயன்​படுத்​திக் கொள்ள முடி​யும்.

கடந்த அக்​டோபர் மாதத்​தில் கழி​வு​களை விற்​பனை செய்​த​தில் மட்​டும் ரூ.800 கோடி ஈட்​டப்​பட்​டுள்​ளது. இது 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்​கு​வதற்கு போது​மான தொகை​யாகும்.

இந்த கழி​வு​கள் விற்​பனை மூலம் 233 லட்​சம் சதுர அடி இடம் மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *