உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவை ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் வாக்கத்தான் விழிப்புணர்வு!!

கோவை,

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவை ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் வாக்கத்தான் மற்றும் ஜும்பா நிகழ்வு நடைபெற்றது.

இதுகுறித்து கோவை ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆர்.பாலமுருகன் கூறியதாவது:–

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாள் சர்க்கரை நோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது, நோய் வந்த பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது.

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு எங்கள் மருத்துவமனையில் சிறப்பு டயட் எக்ஸ்போ நடைபெறுகிறது.

இதில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் எந்தெந்த உணவுகளை தவிர்க்கலாம் என்று விரிவாக விளக்கப்பட உள்ளது. சிறப்பு சலுகை கட்டணம் நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை ஒரு மாத காலத்திற்கு உள்ளது என்றார்.

கோவை ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை, ரோட்டரி மாவட்டம் 3206, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மற்றும் சங்கங்கள், இந்திய மருத்துவ சங்க கோவை கிளை, ஆர்எஸ்எஸ்டிஐ தமிழ்நாடு கிளை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இணைந்து இந்த வாக்கத்தான் மற்றும் ஜும்பா நிகழ்வை நடத்தியது.

கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உள்ள மீடியா டவர் முன்பு நடைபெற்ற இந்த வாக்கத்தான் மற்றும் ஜும்பா நிகழ்வு பொதுமக்களிடம் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு நீரிழிவு நோயுடன் ஆரோக்கியம் என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கோவை இந்திய மருத்துவ சங்க கிளையின் மருத்துவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் என சுமார் 500 பேர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு (2028-–2029), ரொட்டேரியன் எம்.டி. சஞ்சீவிகுமார், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையின் தேர்வு தலைவர் (2026) ஏ.கே.ரவிக்குமார், செயலாளர் கார்த்திக் பிரபு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் க.வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை நிறுவனத் தலைவரும் முதுநிலை சர்க்கரை நோய் நிபுணருமான ஆர்.பாலமுருகன், இந்திய மருத்துவ சங்க கோவை கிளையின் தலைவர் மகேஸ்வரன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய் சிட்டி தலைவர் ஹால்துரை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கிழக்கு தலைவர் ஆர்.விஜயகிருஷ்ணன், ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மிட்டவுன் எம்பிஎச்எப் வி.ஹரிபாஸ்கர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்பத்தூர் மில்லினியம் தலைவர் எம்டி செபி செபஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு டீ சர்ட் தொப்பி மற்றும் சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *