கோவை,
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது. மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு மத்திய பா.ஜனதா அரசு செயலாற்றி வருதாக குற்றம் சாட்டி உள்ளனர்.