முகூர்த்​தம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து இன்று 415 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படும்!!

சென்னை: ​
முகூர்த்​தம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து இன்று 415 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: நவ.21-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை) நவ.22-ம் தேதி (சனிக்​கிழமை) மற்​றும் நவ.23-ம் தேதி (ஞா​யிற்​றுக்​கிழமை மற்​றும் முகூர்த்​தம்) வார விடு​முறை நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்​தும் இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்​புப் பேருந்​துகளை இயக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளன.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று 340 பேருந்​துகளும், நாளை 350 பேருந்​துகளும் இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு இன்று 55 பேருந்​துகளும், நாளை 55 பேருந்​துகளும் மேற்​கூறிய இடங்​களி​லிருந்​து இயக்​க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

பெங்​களூரூ, திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்​கும் 100 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படு​கிறது. மாதவரத்​திலிருந்து இன்​றும், நாளை​யும் 20 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படும்.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்​களி​லிருந்து சென்னை மற்​றும் பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவைக்​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இந்த வார இறு​தி​யில் வெள்​ளிக்​கிழமை அன்று 9,556 பயணி​களும் சனிக்​கிழமை 3,732 பயணி​களும் மற்​றும் ஞாயிறு அன்று 9,635 பயணி​களும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

இந்த​சிறப்பு பேருந்து இயக்​கத்தை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *