கொழும்பு:
பார்வையற்றோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள பி.சாரா ஓவல் மைதானத்தில் இப்போட்டியியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய நேபாள அணி 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணியினர், 12 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தனர்.