மழை குறை​வால் சென்னை குடிநீர் ஏரி​களான பூண்​டி, புழல், சோழ​வரம், செம்​பரம்​பாக்​கம் ஏரி​களி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்தம்!!

திரு​வள்​ளூர்/ காஞ்​சிபுரம்:
மழை குறை​வால் சென்னை குடிநீர் ஏரி​களான பூண்​டி, புழல், சோழ​வரம், செம்​பரம்​பாக்​கம் ஏரி​களி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்தப்பட்டுள்​ளது.

இந்​திய வானிலை ஆய்வு மையம், திரு​வள்​ளூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்​டங்​களுக்கு கனமழைக்​கான எச்​சரிக்​கையை தொடர்ந்து விடுத்து வரு​கிறது.

இதனால், சென்னை குடிநீர் ஏரி​களில் முக்​கிய ஏரி​களான பூண்​டி, புழல், சோழ​வரம் மற்​றும் செம்​பரம்​பாக்​கம் ஏரி​களில் இருந்து உபரி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்​தது.

இதில், பூண்டி ஏரியி​லிருந்து கடந்த நவம்​பர் 27-ம் தேதி முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

தொடக்​கத்​தில் விநாடிக்கு 200 கனஅடி என வெளி​யேற்​றப்​பட்ட உபரிநீரின் அளவு, படிப்​படி​யாக அதி​கரிக்​கப்​பட்​டு, நேற்று முன்​தினம் மாலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 3,500 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டது.

இச்​சூழலில், மழை குறை​வால் நேற்று காலை 6 மணி​யள​வில், பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரி நீரின் அளவு, விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி​யாக குறைக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, காலை 8 மணி​யள​வில் விநாடிக்கு 750 கன அடி​யாக குறைக்​கப்​பட்டது.

பிறகு, காலை10 மணி​யள​வில், பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 250 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டது.

அதே​நேரத்​தில், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்​தும் படிப்​படி​யாக குறைந்​தது. இதனால், நேற்று மதி​யம் 3 மணி​யள​வில், பூண்டி ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்​தப்​பட்​டது.

இதே​போல், புழல் ஏரியி​லிருந்து கடந்த நவம்​பர் 27-ம் தேதி முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

தொடக்​கத்​தில் விநாடிக்கு நூறு கனஅடி என வெளி​யேற்​றப்​பட்டு வந்த உபரிநீரின் அளவு படிப்​படி​யாக அதி​கரிக்​கப்​பட்​டு, நேற்று அதி​காலை​யில் விநாடிக்கு 1,500 கனஅடி என, வெளி​யேற்​றப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், மழை குறை​வால் நேற்று காலை 6 மணி​யள​வில் புழல் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு, விநாடிக்கு ஆயிரம் கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, காலை 8 மணி​யள​வில் விநாடிக்கு 500 கன அடி​யாக​வும், காலை 9 மணி​யள​வில், விநாடிக்கு நூறு கனஅடி​யாக​வும் குறைக்​கப்​பட்​டது.

அதே நேரத்​தில், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்​தும் படிப்​படி​யாக குறைந்​தது. நேற்று மதி​யம் 3 மணி​யள​வில், புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்​தப்​பட்​டது. சோழ​வரம் ஏரியி​லிருந்து கடந்த நவ.29-ம் தேதி முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அந்த உபரிநீர், விநாடிக்கு 200 கனஅடி என, வெளி​யேற்​றப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், மழை குறை​வால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்​து, படிப்​படி​யாக குறைந்​தது.

இதனால், நேற்று மதி​யம் 3 மணி​யள​வில், சோழ​வரம் ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்​தப்​பட்​டது.

செம்​பரம்​பாக்​கம் ஏரியி​லிருந்து கடந்த நவ. 29-ம் தேதி முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

தொடக்​கத்​தில் விநாடிக்கு 1,200 கனஅடி என வெளி​யேற்​றப்​பட்டு வந்த உபரிநீரின் அளவு, அன்று இரவு 3 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டது. பிறகு,அந்​தளவு படிப்​படி​யாக குறைக்​கப்​பட்டு நேற்று காலை 6 மணி வரை, 2,250 கன அடி​யாக இருந்​தது.

இந்​நிலை​யில், மழை குறை​வால் நேற்று பகலில் செம்​பரம்​பாக்​கம் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு, விநாடிக்கு 500 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டது.

இச்​சூழலில், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்​து, படிப்​படி​யாக குறைந்​தது. ஆகவே, நேற்று மாலை 4 மணி​யள​வில் செம்​பரம்​பாக்​கம் ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றம் நிறு​த்​த​ப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *