டெல்லி;
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி மல்லிகா நட்டா. இவரது பெயரில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மார்ச் 19ம் தேதி இந்த காரை, ஓட்டுநர் ஜோகிந்தர் சிங் சர்வீஸ் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.
தனது வீட்டுக்கு சென்று உணவருந்தி விட்டு, பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது அந்த கார் மாயமாகி இருந்தது. உடனடியாக இது தொடர்பாக டெல்லி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் போலீஸார் காரைத் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கார் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே ஹரியாணாவின் குருகிராம் நோக்கி அந்த கார் சென்றது சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேச பதிவு எண் கொண்ட அந்த கார், தற்போது எங்கு உள்ளது என்பது தெரியாததால், போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.