தமிழ்நாட்டிற்க்கு வரபோகிறது புதிதாக 20 சுங்கச்சாவடிகள்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

சென்னை ;

தமிழ்நாட்டில் புதிதாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி-நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3, மகாபலிபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை 16 ஆக குறைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *