ஐபிஎல் 2024 : சென்னை – குஜராத் போட்டியை நேரில் கண்டு கழித்த நடிகர் சூரி !!

ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

போட்டியில் அதிரடியாக ஆடிய ரச்சின் 46 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.

குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியை நடிகர் சூரி நேரில் கண்டு கழித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

“முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில். Fantastic Atmosphere. அற்புதமான ரசிகர்கள். சென்னை என்றாலே தனி கெத்து தான். நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க…தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று சூரி பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *