சென்னை டிபிஐ வளாகத்​தில் ரூ.5 கோடி​யில் அதிநவீன வசதி​களு​டன் மாநில வள மையம் – தொடங்கி வைத்த அமைச்சர் அன்​பில் மகேஸ்!!

சென்னை:
தமிழகத்​தில் மாநில அளவி​லான பயிற்​சிகளின் போது கற்​றல்​-கற்​பித்​தல் செயல்​பாடு​களில் ஆசிரியர்​களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்​றலை வழங்​கும் நோக்​கில், மாநில வள மையம் உரு​வாக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வித்​தார்.

வேக​மாக வளர்ந்து வரும் புதிய தொழில்​நுட்​பங்​கள் அடிப்​படையி​லான கற்​றல், கற்​பித்​தல் உத்​தி​களை ஆய்வு செய்து வகுப்​பறைக்கு தேவை​யான பரிந்​துரைகளை தரு​வது, மாணவர்​கள் செய்து பார்த்து கற்​ப​தற்​கான ஆய்வக மாதிரி​களை உரு​வாக்​கு​வது ஆகியவை இந்த மையத்​தின் நோக்​க​மாகும்.

அந்த வகை​யில் சென்னை டிபிஐ வளாகத்​தில் ரூ.5 கோடி​யில் அதிநவீன வசதி​களு​டன் மாநில வள மையம் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று திறந்து வைத்​தார். அப்​போது பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் உடனிருந்​தார்.

புதி​தாக திறக்​கப்​பட்ட இந்த மையத்​தில், கற்றல், கற்​பித்தலை மேம்​படுத்​தும் வகை​யில், ஆசிரியர்​களுக்கு தேவை​யான ஆலோ​சனை​களை வழங்​க​வும், பணி​யிடை பயிற்​சிகளின் போது ஆசிரியர்​கள் செய்து கற்​ப​தற்கு வாய்ப்​பளிக்​க​வும், கற்​பித்​தலில் புதிய அணுகு​முறை சார்ந்த ஆய்​வு​கள் மேற்​கொள்​ள​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதனுடன், ஆசிரியர் மற்​றும் மாணவர் பாடப்​பொருள் சார்ந்த அறிவை பெறும் வகை​யில், மொழிகள் ஆய்​வகம் மற்​றும் அறி​வியல், கணிதம் ஆகிய பாடங்​களுக்கு தனித்​தனி அரங்​கு​கள், மாற்​றுத்​திறன் குழந்​தைகளுக்​கான அறை, மாணவர்களே பரிசோதனை​களை செய்து பாடங்களை கற்​றுணர `கற்க கசடற’ என்ற பெயரில் தனியே அரங்​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது என்று பள்​ளிக்கல்​வித்துறை தெரி​வித்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *