டி 20 உலகக் கோப்பை​யில் பங்​கேற்க இந்​தியா செல்​ல​மாட்​டோம் – வங்கதேசம் பிடிவாதம்!!

புதுடெல்லி:
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்கை​யில் தொடங்​கு​கிறது. 20 அணி​கள் கலந்து கொள்ளும் இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது.

அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்டங்கள் கொல்​கத்தா மற்​றும் மும்​பை​யில் நடை​பெற உள்ளன.

இதற்​கிடையே வங்​கதேசத்​தில் கடந்த சில மாதங்​களாக இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதனால் இந்​திய கிரிக்​கெட் அணி வங்​கதேச சுற்றுப்பயணத்தை புறக்​கணித்​தது.

மேலும் வங்​கதேச மகளிர் கிரிக்​கெட் அணி​யின் இந்​திய வரு​கை​யும் ரத்து செய்​யப்​பட்​டது. தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்​காக ஏலம் எடுக்கப்பட்​டிருந்த வங்​கதேச வீரர் முஸ்​டாபிஸூர் ரஹ்மான் திடீரென விடுவிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் வங்​கதேச வீரர்​களுக்கு இந்​தி​யா​வில் பாதுகாப்பு இல்லை எனவும், இதனால் டி 20 உலகக் கோப்பை​யில் பங்​கேற்க இந்​தியா செல்​ல​மாட்​டோம் எனவும் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​தது.

வங்கதேச அணி​யின் ஆட்​டங்​களை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சிலிடம் (ஐசிசி) கோரிக்​கை​யும் வைத்​தது. ஆனால் ஐசிசி இதை நிராகரித்தது.

மேலும் வங்​கதேசம் கூறு​வது போன்று அந்​நாட்டு வீரர்களுக்கு இந்​தி​யா​வில் எந்​த​வித பாது​காப்பு அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரி​வித்​தது. இதையடுத்து பல முறை வங்​கதேச கிரிக்​கெட் வாரிய நிர்வாகி​களு​டன் ஐசிசி தரப்​பில் இருந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. ஆனால் வங்​கதேச வாரி​யம் தனது முடிவில் விடாப்​பிடி​யாக இருந்​தது.

இந்​நிலை​யில் ஐசிசி நேற்று முன்​தினம் ஒட்​டெடுப்பு நடத்தியது. அதில், போட்​டிகளை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என்ற வங்​கதேச அணி​யின் கோரிக்​கைக்கு ஆதரவு கிடைக்​க​வில்​லை. இதைத் தொடர்ந்து வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு கூடு​தலாக 24 மணி நேரம் அவகாசத்தை ஐசிசி வழங்​கியது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்​தது.

இந்​நிலை​யில் இதுதொடர்​பாக வங்​கதேச விளை​யாட்டு ஆலோ​சகர் ஆசிப் நஸ்​ருல் நேற்று டாக்​கா​வில் வங்​கதேச கிரிக்​கெட் வாரிய தலை​வர் தலை​வர் அமினுல் இஸ்​லாம், தலைமை நிர்​வாக அதி​காரி நிஜா​முதீன் மற்​றும் வங்​கதேச கிரிக்​கெட் வீரர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதில் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வுக்கு பயணிப்​ப​தில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்​பாக ஆசிப் நஸ்​ருல் கூறிய​தாவது:

டி20 உலகக் கோப்​பைத் தொடருக்கு தகுதி பெறு​வதற்​காக வங்​கதேச அணி​யின் வீரர்​கள் கடின​மாக உழைத்துள்ளார்கள்.

இந்​தி​யா​வில் விளை​யாடு​வ​தால் எங்களது வீரர்​களின் பாது​காப்​புக்கு ஆபத்து ஏற்​படும் சூழல் அப்​படியே​தான் தொடர்​கிறது. அதனால், வங்​கதேச அணி உலகக் கோப்​பைப் போட்​டிகளை இந்​தி​யா​வில் விளை​யா​டாது.

எங்​களது வீரர்​கள், பத்​திரி​கை​யாளர்​கள் மற்​றும் ரசிகர்கள் அனை​வரின் பாது​காப்​பை​யும் இந்​தியா உறுதி செய்​யும் என்​ப​தில் உடன்​பாடில்​லை. நாங்​கள் இன்​னும் நம்பிக்கையை கைவிட​வில்​லை.

எங்​களது அணி தயா​ராக இருக்​கிறது. பாது​காப்பு காரணங்​களுக்​காக இந்​தி​யா​வில் விளை​யாட மறுக்​கும் எங்​களது கோரிக்​கைக்கு ஐசிசியிடமிருந்து நீதியை எதிர்​பார்க்​கிறோம். வங்​கதேச அணிக்​கான போட்​டிகளை இலங்​கைக்கு மாற்​றியமைக்க மீண்​டும் கேட்​டுக் கொள்​கிறோம்.

இது அரசின் முடிவு. ஏனெனில் எங்​கள் நாட்​டின் குடிமக்​கள் வெளி​நாடு​களில் பாது​காப்பு அபா​யங்​களை எதிர்​கொள்​கிறார்​களா என்​பதை தீர்​மானிக்​கும் பொறுப்பு எங்களுக்கு உள்​ளது. இந்த முடி​வின் பின்​னணி​யில் உள்ள சூழலை​யும் அரசின் காரணத்​தை​யும் விளக்க வீரர்​களைச் சந்​தித்​தோம். அவர்​கள் நிலை​மை​யைப் புரிந்துகொண்டனர்.

வங்​கதேசம் கிட்​டத்​தட்ட 200 மில்​லியன் ரசிகர்​களைக் கொண்ட கிரிக்​கெட்டை விரும்​பும் நாடு. ஐ.சி.சி எங்களுக்கு இடமளிக்​கத் தவறி​னால், அது உலக கிரிக்கெட்​டுக்​கும், போட்​டியை நடத்​தும் நாட்​டுக்​கும் ஒரு குறிப்பிடத்​தக்க இழப்​பாக இருக்​கும்.

இவ்​வாறு ஆசிப் நஸ்​ருல் கூறி​னார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடருக்​காக இந்தியாவுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள மாட்​டோம் என வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் மீண்​டும் கூறி​யுள்​ள​தால் அந்த அணி தொடரில் இருந்து நீக்​கப்​படக்​கூடும்​ என கருதப்​படு​கிறது. வங்​கதேச அணிக்​கு பதிலாக ஸ்காட்லாந்​து அணி இடம்​ பெறக்கூடும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *