கறிக்கோழி வளர்ப்பு விவ​சா​யிகள் போராட்​டத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

சென்னை:
கறிக்கோழி வளர்ப்பு விவ​சா​யிகள் போராட்​டத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று, அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் தனி​யார் நிறு​வனங்​கள் கோழிக் குஞ்​சுகளை விவ​சா​யிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்​களுக்​குப் பின் திரும்ப பெற்​றுக் கொள்​கிறார்​கள்.

இதற்​காக, ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 கூலி​யாக தரு​கிறார்​கள். இந்த கூலியை ரூ.20 ஆக உயர்த்தி தரும்​படி பல்​வேறு மாவட்​டங்​களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமை​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். அவர்​களில் பலர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுதொடர்​பாக, தமிழக சட்​டப்​பேர​வை​யில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானம் நேற்று கொண்டு வரப்​பட்​டது.

இந்த தீர்​மானத்​தில் விவ​சா​யிகள் கோரிக்​கையை நிறைவேற்றி தர வலி​யுறுத்தி சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் கொங்கு ஈஸ்​வரன், அப்​துல் சமது, ஏ.கே. செல்​வ​ராஜ், அருள், ராஜேஷ் கண்​ணா, ராமச்​சந்​திரன், நாகை மாலி பேசினர்.

இதற்​கு, அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்து பேசுகை​யில், “இந்த விவ​காரம் கறிக்கோழி வளர்ப்​பவர்​களுக்​கும், சம்​பந்​தப்​பட்ட தனி​யார் நிறு​வனங்​களுக்​கு​மான பிரச்​சினை​யாகும்.

அவர்​களே கூலி மற்ற விஷ​யங்​களை பேசித் தீர்த்​துக் கொண்டு வந்​தார்​கள். இதற்​கும், அரசுக்​கும் நேரடி​யாக எந்த சம்​பந்​த​மும் இல்​லை.

அதே​நேரம், இந்த விவ​காரம் முதல்​வர் கவனத்​துக்கு சென்​ற​தால், இதுதொடர்​பாக, ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 20 ஆயிரம் விவ​சா​யிகள் 66 நிறு​வனங்​களுக்​காக கோழி வளர்க்​கிறார்​கள். ஆண்​டுக்கு 50 முதல் 55 கோடியள​வில் கோழிகள் வளர்க்​கப்​படுகின்றன இந்த பிரச்​சினை சுமூக​மாக பேசி தீர்க்​கப்​படும்​” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *