தொடக்க ஓவரில் 18 ரன்களை தாரை​வார்த்​த இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங்!!

ராய்ப்பூர்:
இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் இடையிலான 2-வது டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடை​பெற்​றது.

டாஸ் வென்ற இந்​திய அணியின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இந்​திய அணி​யில் 2 மாற்​றங்​கள் இருந்​தன. காயம் காரண​மாக அக்​சர் படேல் களமிறங்​க​வில்​லை. அதேவேளை​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு கொடுக்கப்பட்​டது.

இவர்​களுக்கு பதிலாக குல்​தீப் யாதவ், ஹர்​ஷித் ராணா களமிறக்​கப்​பட்​டனர். நியூஸிலாந்து அணி​யில் 3 மாற்றங்கள் செய்​யப்​பட்டு இருந்​தன.

டிம் ராபின்​சன், கைல் ஜேமிசன், கிறிஸ்​டியன் கிளார்க் ஆகியோர் நீக்​கப்​பட்டு டிம் ஷெய்​பர்ட், மேட் ஹென்​றி, ஜாக் ஃபோக்ஸ் ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்புக்கு 208 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக ரச்​சின் ரவீந்​திரா 26 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் விளாசி​னார். டெவன் கான்வே 19, டிம் ஷெய்​பர்ட் 24, கிளென் பிலிப்ஸ் 19, டேரில் மிட்​செல் 18, மார்க் சாப்மேன் 10 ரன்​கள் சேர்த்​தனர்.

இறுதிக்​கட்ட ஓவர்​களில் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் அதிரடி​யாக விளை​யாடி 27 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 47 ரன்​களும், ஜாக் ஃபோக்ஸ் 8 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 15 ரன்​களும் விளாசினர்.

இந்த ஆட்​டத்​தில் தொடக்க ஓவரை வீசி​யிருந்த இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங் 18 ரன்களை தாரை​வார்த்​தார். இதன் மூலம் ஆட்​டத்​தின் முதல் ஓவரில் அதிக ரன்​களை விட்​டுக்​கொடுத்த இந்​திய வீரர்​களில் புவனேஷ்வர் குமாருடன் சாதனையை பகிர்ந்​து​கொண்​டார்.

அவர், 2022-ல் அயர்​லாந்​துக்கு எதி​ராக 18 ரன்களை வழங்​கி​யிருந்​தார். அர்​ஷ்தீப் சிங் வீசிய 2-வது ஓவரிலும் 18 ரன்​கள் விளாசப்​பட்​டன. ஒட்​டுமொத்​த​மாக 4 ஓவர்​களை வீசிய அவர்​, 53 ரன்​களை வாரி வழங்​கி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *