மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 93.63 அடியாக குறைந்தது!!

மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு போதிய தண்ணீர் இருந்ததால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்தை விட பல மடங்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 93.63 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.63 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் தண்ணீர் நாளை மறுநாள் (28-ந்தேதி)யுடன் நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *