தூய்மைப் பணியாளர் பத்மாவை கவுரவித்த அஞ்சல்துறை!!

சென்னை:
சென்​னை, திரு​வல்​லிக்​கேணி, பிள்​ளை​யார் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் பத்மா (48), தூய்​மைப் பணியாளர். இவர், தி.நகரில், வண்​டிக்​காரன் பகு​தி​யில் கடந்த 11-ம் தேதி பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, சாலை​யில் கிடந்த பையை எடுத்து பார்த்​தார்.

அதில், 45 பவுன் தங்க நகைகள் இருந்​தன. உடனடி​யாக, நகையை பாண்​டிபஜார் காவல் நிலை​யத்​தில் ஒப்படைத்தார். விசா​ரணை​யில், அந்த நகைகள் நங்​கநல்​லூரைச் சேர்ந்த பரமேஷ் (46) என்​பவருக்கு சொந்​த​மானது என தெரிய​வந்​தது.

அவரிடம் நகைகள் ஒப்​படைக்​கப்​பட்​டன. பத்​மாவுக்கு பாராட்​டுக்​கள் குவிந்​தன. முதல்​வர் ஸ்டா​லினும் ரூ.1 லட்சத்​துக்​கான காசோலையை வழங்​கி​னார்.

இந்​நிலை​யில், சென்னை மத்​திய கோட்​டத்​தில் முது​நிலை அஞ்​சல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் சார்பில் மை ஸ்டாம்பில் பத்​மா​வின் ஃபோட்​டோவுடன் அஞ்​சல் தலை வெளி​யிட்டு கவுரவப்படுத்தியது.

இந்​தியா போஸ்ட்பேமென்ட் பேங்க் சார்​பில், பிரீமி​யம் கணக்கு மற்​றும் ரூ.15 லட்​சத்​தில் விபத்து காப்​பீடு பாலிசி வழங்​கப்​பட்​டது.

அவரது பெயரில் கால வைப்பு கணக்கு தொடங்​கப்​பட்​டது. இவரை முது​நிலை அஞ்​சல் கண்​காணிப்பு அதி​காரி விஷ்ணு​ராஜ் கவுர​வித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *