குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 200-க்கு அதிகமான ரன்னை சேஸிங் செய்ததில் கிங்ஸ் பஞ்சாப்தான் “கிங்”!!

குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 200 ரன்கள் வெற்றி இலக்காக பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

200 மற்றும் அதற்கு மேல் உள்ள இலக்கை வெற்றிகரமாக துரத்தியதில் பஞ்சாப் அணி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சேஸிங் செய்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி நேற்றைய சேஸிங் உடன் இதுவரை ஆறு முறை 200 ரன்ககளுக்கு மேலான இலக்கை எட்டி முதலிடம் பிடித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை இலக்கை எட்டி 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை 200 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டி மூன்றாவது இடத்தை வகிக்கின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 இலக்கை எட்டி இருந்தது. இதுதான் அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தற்போது பஞ்சாப் அணி 200 இலக்க எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178 ரன்னையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவர் நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 171 ரன்னையும் எட்டி இருந்தது அதிகபட்ச சேஸிங் ஆகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *