உடல்நலக்குறைவால் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்…..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

நேற்று முதலமைச்சர் கலந்து கொண்ட விழுப்புரம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் வருவதற்கு முன்பாக பொதுக்கூட்டம் மேடைக்கு அருகில் இருக்கும் ஓய்வறையில் அமைச்சர் பொன்முடி, வேட்பாளர் விஷ்ணு பிரசாத், எம்எல்ஏ புகழேந்தி ஆகியோர் அமர்ந்திருந்த நிலையில் , புகழேந்திக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த அவரை பொன்முடி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் .

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தியின் திடீர் மரணம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி. 1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 – 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *