டி20 உலகக் கோப்பை தொடரில் 200+ ரன்களை குவித்த அணி என்ற பெருமை பெற்ற ஸ்காட்லாந்து அணி!!

மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே- மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.

இதில் ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் 15 ரன்னில் வெளியேறினார்.


இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் மெக்முல்லன் 18 பந்தில் 41 ரன்களும் மைக்கேல் லீஸ்க் 5 பந்தில் 22 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 200+ ரன்களை குவித்த அணி என்ற பெருமையை ஸ்காட்லாந்து அணி பெற்றுள்ளது. பெரிய அணிகள் கூட 200 ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *