விக்கிரவாண்டி எம்எல்.ஏ. புகழேந்தி உடல் நலக்குறைவால் மறைவு – வைகோ இரங்கல்!!

விக்கிரவாண்டி எம்எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. நேற்று முதலமைச்சர் கலந்து கொண்ட விழுப்புரம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த நிலையில் புகழேந்திக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மயக்கமடைந்த அவரை அமைச்சர் பொன்முடி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் . அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி எம்எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி அவர்கள் நேற்று இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

புகழேந்தி அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *