புதுக்கோட்டை மாவட்டத்தில், திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 42 வார்டுகளில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தரும் வட்டச் செயலாளர்களுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதேபோல், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அறந்தாங்கியை அடுத்த நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் நெவளிநாதன், விஜயபாஸ்கரின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் பெறவைத்தால், விஜயபாஸ்கருக்கு ஆடி கார் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவருடைய அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.