தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஆதரவு பெரு கியுள்ளதால் மீண்டும் மோடி , வேண்டும் மோடி என்று மக்கள் முழக்கம் !!

வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சென்னையிலிருந்து விமானம் மூலம் வேலூர் சென்றடைந்த பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். பாஜக கூட்டணி வேர்பாளர்கள் ஏ.சி. சண்முகம், சௌமியா அன்புமணி, கே. பாலு ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு செங்கோல் பரிசு வழங்கப்பட்டது .

இதை தொடர்ந்து, எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், வரும் ஆண்டு நம் அனைவருக்கும் நல்ல வளமான ஆண்டாக அமையும் என்று தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் , தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன். மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர். இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஆதரவு பெருகியுள்ளதால் மீண்டும் மோடி , வேண்டும் மோடி என்று மக்கள் முழக்கமிடுகின்றனர் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *