”தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது” – பிரதமர் மோடி

திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகே தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது; திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் . வறுமையில் இருந்த மக்களுக்கு பாஜக அரசு வீடு, மின்சாரம், ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளது.

திமுக சுயலாபத்திற்காக தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச கேட்டை விளைவித்துக் கொண்டிருக்கிறது. யார் ஆட்சியாக இருந்தாலும் அந்த மாநிலத்தின் உயர்வுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது; தமிழ்நாட்டிற்கு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’. ஏதாவது பொய்களை சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே திமுக, காங்கிரசின் நோக்கம்.

எங்களுடைய அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளது. திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை. காங்கிரஸ், திமுக அரசுகள் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவினருக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *